காதாசப்தசதியும் கட்டவிழ்ப்பு நோக்கும்

சமூகம் சரிவர இயங்கிடவும் இயங்காது தன்னையே அழித்திடவும் சமவுரிமை, சமவுரிமை இன்மையே காரணமாய் அமைகிறது, இதில் ஆண் பெண் என்பவர்கள் உறுப்புகளில் வேறுப்பட்டோரே தவிர உணர்வுகளில் ஒன்று பட்டோரே, இதையறியாது கற்பு என்றும் நற்பால் ஒழுக்கம் என்றும் நடுநிலை தன்மை தளர்த்தி ஒருதலையாக கட்டமைத்து உள்ளதை காதாசப்தசதி பாடல் வழியே நாம் அறியலாம்.