Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

இலங்கையில் இராவணன் ஆட்சி முறை

You are here:
  1. Home
  2. Article
  3. இலங்கையில் இராவணன் ஆட்சி முறை
Kalanjiyam - International Journal of Tamil Studies

Kalanjiyam – International Journal of Tamil Studies, Volume: 01 Pages: 6-9 : 2020

ISSN:2456-5148

இலங்கையில் இராவணன் ஆட்சி முறை

நெறியாளர் முனைவர் ப.மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை., “இலங்கையில் இராவணன் ஆட்சி முறை”, Kalanjiyam – International Journal of Tamil Studies , 01, NGM College Library (2020): 6-9 

Abstract :

பண்டைய காலத்தில் முடியாட்சியே நடைமுறையில் இருந்து வந்தது. மன்னன் மட்டுமே உயர்ந்தவனாகக் கருதப்பட்டான். “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” - (குறள் என்: 385) என்ற திருக்குறளின்படி அரசர்கள் பொருட்களை உருவாக்கி, செல்வத்தை ஈட்டி, நாட்டின் வளத்தைப் பெருக்கி, மக்களைப் பாதுகாத்தனர். மக்களின் நலனுக்காக சிறந்த நெறிமுறைகளை வகுத்துத் திறமையான ஆட்சி நடத்தினார்கள். மக்களும் மன்னர்களைத் தெய்வமாகவே எண்ணி வாழ்ந்தார்கள். ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு கூறுகிறது. “நாடா கொன்றோ, காடா கொன்றோ அவலா கொன்றோ, மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” - புறம் - 187 காடு, மேடு, பள்ளம் போன்ற நிலத்தோற்றங்கள் ஒரு நாட்டில் இயல்பாகவே காணப்படுபவை. அவை, எப்படி மாறுபட்டு இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் நல்லவர்களாக இருந்கும்போது அது நல்ல நாடாகவே கருதப்படும் என்பது இப்பாடலின் கருத்தாகும். அரசர்களும் அறிவு, அன்பு, ஆற்றல் உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆறிவினால் நாட்டின் காவலுக்கு உரியவற்றை ஆராய்ந்து முறை தவறாது காப்பாற்ற வேண்டும். “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” - குறள் - 544. குடிமக்களின் நலனை அரவணைத்து நல்லாட்சி செய்யும் தலைவனின் வழியைப் பின்பற்றியே உலக மக்கள் துணைநிற்பர் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும். அன்பினால் குடிமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்று வருபவர்களுக்கு ஈதலும், தன்னுடைய ஆற்றலினால் பகையரசனை வீழ்த்துவதும், போரில் வெற்றி பெறுதலும் அரசனின் கடமைகளாக இலக்கியங்கள் கூறுவதைக் காணலாம். அதே சமயம் சில அரசுகள் சிறப்பான ஆட்சியைத் தரமுடியாத நிலையில் இருந்திருக்கின்றன. அரசர்களின் குணநலன்களைப் பார்க்கும்போதும், அரசுகள் ஒன்றுக்கொன்;று மாறுபட்ட இருந்திருக்கின்றன. இந்த வேறுபாடுகள்தான் ஒரு அரசு நல்லரசா? வல்லரசா? என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியிருக்கின்றன.

Content :

இலங்கை அரசு

கம்பர் தன்னுடைய காப்பியத்தில் இலங்கையை ஆண்ட அசுரர்கள் ஒழுக்கக்கேடானவர்கள்; பிறரைத் துன்புறுத்துபவர்கள்; புலால் உண்பவர்கள்; கள் குடிப்பவர்கள்; அறத்தை மறந்தவர்கள் என எதிர்மறையான செயல்களைச் செய்பவர்களாகவே இருந்தார்கள் என்று கூறுகின்றார்.

இலங்கை அரசின் குறைபாடுகள்

இராவணன் தேவர்களைச் சிறைபிடித்தலும், இந்திரனை வென்றதும், தேவமகளிரை ஏவலர்களாக ஆக்கியதும் போர் தொடர்பான நிகழ்ச்சிகள். இவைகளை வைத்து இராவணன் தவறானவன் என்று கூறிவிடமுடியாது. அயோத்தியில் தயரதனும் சம்பராசுரன் மேல் போர் தொடுத்துள்ளான். அரசர்கள் போர் தொடுப்பதும், அதில் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் இயல்பான நிகழ்ச்சிகள். எனவே, போர் புரிவதைப் பெரியகுற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஆனால் இராவணன், சீதையைக் கவர்ந்து சென்றதும், அவள் மீது ஆசை கொண்டதும் பெரிய குற்றமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் வாழ்ந்த ஒரு சாதாரணக் குடிமகன் இச்செயலைச் செய்திருந்தால் அது குற்றம் என்ற அளவில் பேசப்பட்டு, அத்தோடு முடிந்துபோயிருக்கும். ஆனால் ஒரு நாட்டின் மன்னன் அந்தத் தவறைச் செய்யும்போது குற்றத்தின் கடுமை அதிகமாகின்றது. இராவணன் செய்த இந்தச் செயலை, அரசவையில் உள்ளவர்களும், உறவினர்களும் எவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள், அவற்றை இராவணன் எவ்வாறெல்லாம் எதிர்கொள்கிறான் என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

அரசவையில் இராவணன் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள்

சீதையைத்தேடி அனுமன் இலங்கைக்கு வருகிறான். அப்போது இராவணன் மகனான இந்திரசித்து அனுமனை சிறைபிடித்து, அரசவைக்குக் கொண்டு வருகிறான். அனுமன் இலங்கையில் செய்த அழிவுகளைக்; கேட்டு, அவனைக் கொல்ல இராவணன் ஆணையிடுகிறான். உடனே அங்கிருந்த வீடணன், “தூதரைக் கொல்லுதல் அறமன்று; அவ்வாறு செய்தால் நம் அரசாட்சிக்குப் பழியே வந்து சேரும்” என்று கூறியதும் இராவணன், “நல்லது உரைத்தாய் நம்பி” என்று கூறி, வீடணன் கூற்றை ஏற்றுக் கொள்கிறான்.

இராவணன் எல்லையற்ற சினத்தை உடையவனாய் இருந்தாலும், தன் தவறைச் சுட்டிக்காட்டியதும் அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற இயல்பு இராவணனின் சிறந்த குணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இலக்குவன் காட்டில் சூர்ப்பனகையின் மூக்கினை அரிந்து, பங்கப்படுத்திவிடுகிறான். உடனே, சூர்ப்பனகை இராவணனிடம் வந்து புலம்புகிறான். அதைக்கேட்ட இராவணன் பெருஞ்சினம் கொண்டாலும், மிக நிதானமாக ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

“நீயிடை இழைத்த குற்றம் என்னை கொல்

                                நின்னை இன்னே

                வாயிடை இதழும் மூக்கும் வலிந்து

                                அவர் கொய்ய?” என்றான். (கம்பராமாயணப் பாடல்கள்: 3132)

தன் தங்கையின் நிலைகண்டு, கோபம் கொண்ட போதும்; நீ என்ன குற்றம் செய்தாய்?” என்று நடுநிலையோடு கேட்பதன் மூலம் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், குற்றம் கண்டவுடன் அதைக் கண்டிப்பட்டது. இராவணன் குல மரபாக இருந்திருக்கிறது.

இராமன் வானரப்படையுடன் இலங்கைக்கு வந்து விட்டான். இதனை அறிந்த இராவணன், தன் மந்திராலோசனை சபையைக் கூட்டி, போரை எதிர்கொள்ளும் முறைகள் பற்றிப் படைத்தலைவர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்துகிறான்.

அப்போது, அரசவையில் இருந்த அனைவரும் போருக்குக் காரணமாக இராவணன் ஒரு நாட்டின் அரசன் என்றபோதும், அவன் செய்த மாபெரும் தவறினைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள். சிலர் கடுமையான மொழிகளாலும், வெகு சிலர் மென்மையாகவும் இராவணனைத் தாக்கிப் பேசுகிறார்கள். அப்போது இராவணன் தன்னைப் பற்றிய விமர்சனத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அரசன் என்பதற்காகப் பயந்து, வாய்மூடி மௌனமாய் இராமல், இராவணனின் தவறுகளைத் தைரியமாக அவனிடமே எடுத்துரைக்கிறார்கள். அவனும் அவர்களைப் பேச அனுமதித்து, அவர்களது கருத்துக்களைத் தன் மனதுள் வைத்துக்கொள்கிறான். ஒரு சனநாயக நாட்டில் நிலவுகின்ற பேச்சு சுதந்திரம், முடியாட்சி நடைபெறும் இலங்கையிலும் இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.

முடிவுரை

இக்காலச் சட்டமன்ற – நாடாளுமன்ற – நிகழ்வுகளில் எதிர்க்கட்சியினர் சிறுபான்மையாக இருந்தாலும், தங்கள் கருத்தை ஆளுங்கட்சி முழுமையாக அங்கீகரிக்காது என்பது தெரிந்த பின்னரும், எதிர்க்கட்சியினர் தம் பக்கத்து நியாயத்தைப் பதிவு செய்வர்.

அதுபோன்ற ஒரு நிலைதான் இராவணன் ஆட்சியிலும் இருந்திருக்கிறது. மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஒரு குடியாட்சியில் இருக்க வேண்டிய அனைத்துப் பொதுவுடைமை முறைமகளும் இராவணனது ஆட்சியில் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.

DOWNLOAD PDF

REFERENCES:

  1. திருக்குறள்
  2. கம்பராமாயணம் – யுத்த காண்டம்
  3. கம்பரின் மறுபக்கம் – புலவர் ஆ.பழனி
  4. புறநானூறு
Full Text - PDF
Full Text - PDF
BibTex
Cite

Cite:

MLA

ACM

Download PDF
Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader