களஞ்சியம் (Kalanjiyam) – An International Journal of Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English that publishes research articles, book reviews and new manuscripts relating to Tamil classical and modern literature, grammar, folklore and translation.
ISSN : 2456-5148
தமிழ் மொழியானது, உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது. தமிழகத்திற்கு வெளியே பல பல்கலைக்கழகங்களிலும், மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயல், இசை, நாடகம் என்ற வரையறையில் இருந்து விலகி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல் எனப் பல்துறை சார்ந்து, தமிழாய்வு விரிவடைந்துள்ளது. இத்தகு சூழலில் தமிழாய்வினுக்கெனப் புதிய ஆய்விதழ்கள் நிரம்பத் தேவையாக உள்ளன.
தமிழாய்வுடன் தொடர்புடைய பிற துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பிட வேண்டுகின்றோம். கல்விப்புலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, தீவிரமாகத் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள வேறு பணியிலுள்ளவர்களும் தங்களுடைய கட்டுரைகளை அனுப்பினால், ஆய்விதழின் நோக்கம் முழுமையடையும். சிறுபத்திரிக்கை சார்ந்தவர்களும் தமிழாய்வு குறித்துக் கட்டுரைகள் அனுப்பும்போது, ஆய்விதழின் பரப்பு விரிவடையும். ஆய்விதழ் தரத்துடன் வெளிவர தமிழாய்வில் அக்கறையுள்ளவர்கள், ஒத்துழைப்பு நல்கிட வேண்டியது அவசியம்.
களஞ்சியம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டிதழாகத் தொடர்ந்து பிரசுரமாகும். இந்த ஆய்விதழில் வெளியிடப்படுவதற்குத் தரமான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
CURRENT ISSUE
- முனைவர் தோ. கிரேசி May 25, 2022மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.முனைவர் தோ. கிரேசி
- முனைவர் ப.மகேஸ்வரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை 18. February 1, 2022தொன்மங்கள் (ஆலவா) தெய்வங்களைப் பற்றிய தொல் பழங்காலத்தைச் சேர்ந்த கதைகளாகும். இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டு இவ்வுலகம் மட்டுமல்லாமல் கீழ் உலகங்கள், மேல் உலகங்கள் என்று பலவற்றிற்கும் ஊடுருவிச் செல்லும் நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும். அவையாவும் உண்மையென்றும், புனிதமென்றும் நம்பப்பட்டு வருகின்றன. “மேலை இலக்கியங்களுக்கெல்லாம் பைபிளே மூலத்தொன்மம் (ளுழரசஉந ஆலவா) என்றும் அதிலிருந்தே இலக்கிய கருக்களும், இலக்கிய வகைகளும், பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் பெறப்பட்டன என்றும் நார்த்ராப்ஃபிரை கூறுவார்”. சங்கப்பாடல்கள் பல தொன்மக்கருத்துகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில் தொன்மங்கள் புறநானூற்றில் […]ப.மகேஸ்வரி
CHIEF EDITOR
Dr. R. MUTHUKUMARAN, M.A.,M.Phil.,B.Ed.,Ph.D., PRINCIPAL, N.G.M. COLLEGE, POLLACHI. Mobile: 9942922225
EDITORS
DR A.MAHALAKSHMI, ASSISTANT PROFESSOR IN TAMIL, N.G.M. COLLEGE, POLLACHI.
DR T.GEETHANJALI, ASSISTANT PROFESSOR IN TAMIL, N.G.M. COLLEGE, POLLACHI.
Mr. S.VEERAKANNAN, ASISTANT LIBRARIAN, NGM COLLEGE, POLLACHI