பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு (நான்மணிக்கடிகை)
பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு (நான்மணிக்கடிகை) ஆய்வாளர் : மு.விஜயலட்சுமி (Ph.D.Ref.No.MKU22FFOL10317), முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி – 626 123. மின்னஞ்சல் முகவரி : vijayalakshmisfr@gmail.com நெறியாளர்: முனைவர் ப.மீனாட்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி - 626 123.
DOI:
https://doi.org/10.35444/Keywords:
உரிச்சொல் பயன்பாடு, நான்மணிக்கடிகைAbstract
கருத்துப் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது . அம்மொழி சொற்களின் கூட்டிணைப்பினால் வடிவம் பெறுகின்றன. அச்சொற்களினை பயன்பாடு மற்றும் பொருண்மையின் அடிப்படையில் நான்கென இலக்கண நூலார் வகுத்துரைக்கின்றனர். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களுள் ஒன்றாக உரிச்சொல் விளங்குகிறது. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் உரிச்சொல்லிற்கான இலக்கணத்தையும் உரிச்சொற்களையும் அவ்வுரிச்சொற்களுக்கானப் பொருண்மையினையும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தில் மொத்தம் 120 உரிச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. பாக்களில் இடம்பெற்றுள்ள நயங்களே பாடல்களுக்கு அழகு சோ்க்கின்றன. சொற்களை அடிப்படையாகக் கொண்டே நாம் நயங்களை கணக்கிடுகிறோம். அவ்வகையில் உரிச்சொற்களும் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் உரிச்சொல் எவ்வாறு நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Downloads
References
இராசாராம் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவுரையும் (மூன்றாம் பகுதி), முதற் பதிப்பு : 1995, முல்லை நிலையம், பாரதிநகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017.
இராமசுப்பிரமணியம்.வ.த - தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் விளக்கவுரையும், 127, பிரகாசம் சாலை, சென்னை – 600 108.
இராமசுப்பிரமணியம்.வ.த - தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும், முதற் பதிப்பு : ஏப்ரல் 1998, முல்லை நிலையம், பாரதிநகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017.
கந்தையா ந.சி - செந்தமிழ் அகராதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 013.
சுப்பிரமணியன் ச.வே - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவுரையும், முதற்பதிப்பு : 21, ஜீன் 2010, மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை – 600 021.
சேனாவரையர் உரை - தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)- முதற்பதிப்பு : 2005 சாரதா பதிப்பகம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 600 014.
திருஞானசம்பந்தம்.ச - பவணந்தி முனிவரின் நன்னூல் - சொல்லதிகாரம் முதற்பதிப்பு - நவம்பர் 2009 ராஜா பப்ளிகேஷன், நெ.10, முதல் தளம், இப்ராஹிம் நகர், காஜாமலை, திருச்சி – 23.
மெய்யப்பன்.ச - தமிழ் நிகண்டுகள் (தொகுதி – 1), முதற்பதிப்பு : பிப்ரவரி; 2014, மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை 600 021.
ராசா.கி - தொல்காப்பியம் (சொல்), முதற் பதிப்பு : டிசம்பர் 2007. பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
வேணுகோபாலப்பிள்ளை.மே.வீ – அமிதாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பதிப்பாசிரியர்) (பழைய விருத்தியுரையுடன்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 005.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.