சங்கமாந்தர் பண்பாட்டில் உணவுமுறைகள்
முனைவர் ந.அரவிந்த்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூர், கோவை – 07. aravindanbu4321@gmail.com ORCID ID : 0009-0004-2756-3847
Keywords:
உணவுமுறைகள், சங்கமாந்தர்Abstract
இயற்கையோடு இயைந்த மனித வாழ்வியலில் உணவானது முதன்மை பெறுகிறது. உயிர்கள் இயங்குவதற்கு ஆதாரமான உணவு சங்க மாந்தர்களின் நடைமுறை வாழ்க்கையில் பண்பாட்டு விழுமியங்களாகக் காட்டப்பட்டுள்ளன. சூழலுக்குத்தக்க முறையில் குடிகளை அமைத்து வாழ்ந்த தமிழரினம், தாம் வாழும் நிலத்தில் கிடைத்த உணவுகளைப் பலவகை வழிமுறைகளைப் பின்பற்றிச் சுட்டும், பதப்படுத்தியும், வேகவைத்தும், பச்சையாகவும் உண்டு வாழ்ந்துள்ளனர். எல்லா உயிருக்கும் பொதுவான உணர்வாகிய பசி என்பது உணவினால் அடைவு செய்யப்படுவதை ஆற்றுப்படை இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. சங்கமாந்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பண்பாட்டு நிகழ்வுகளான திருமண உறவுமுறைகள், இறை வழிபாடுகள், திருவிழாக்கள், போர்கள், விளையாட்டுகள் என்ற அனைத்திலும் உணவின் தனித்துவம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நிலத்தின் அமைவிற்கேற்ப கிடைக்கப்பெறும் உணவாகிய கருப்பொருள், உயிர்களின் நிலைபேற்றிற்கு ஆதாரமாக இருப்பதோடு, பழந்தமிழரின் மரபுமாறாப் பண்பாட்டின் சிறப்புநிலை கூறுகளாகவும் விளங்குகின்றன என்பதை ஆராய்ந்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.