field_645b34b8ba866

கம்பராமாயணத்தில் மீன்கள்

மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும்.
மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன.

திருஞானசம்பந்தர் தேவாரம் – திருக்கடைக்காப்பு

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார். அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh, இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும். சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை. ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது. இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார். சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார். அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்

கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள்

முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.

வைணவ சமய நெறிமுறைகள்

வைணவ சமயம் விவை முழூமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம்  இந்து  சமயத்தின் ஆறு  உட்பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும்போது விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக்கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.ஆனால் திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கன மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் ஆகும். அதே போல் உபநிதடங்கள் 14-ம் சிறப்பாகப் பேசப்படுகிறது..

வேளாண்மையின் வரலாறும் போக்கும்

வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது.

வேளாண்குடி வரலாறும் அடையாளமும்

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகள், தமிழின வேளாண்குடிகளின் தோற்றத்தை, தொன்மையை புலப்படுத்தும். வேளாண்குடிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்திற்கேற்ப பண்பாட்டையும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துக் கொண்டனர்.

வேளாண் – வேள் ஆள் எனப் பிரித்து ‘வேள்’ என்பது ‘மண்’ எனும் பொருளையும், ‘ஆள்’ என்பது ‘ஆளுதல்’ எனும் பொருளையும் தருகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மருதநிலத்து மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையிலேயே வாழ்ந்து இயற்கையில் கிடைக்கக் கூடியப் பொருள்களை உண்டு தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்து வந்தான். நாளடைவில் உணவின் தேவை கருதி ஆற்றுப் படுக்கையில் நெல்லை பயிரிட்டு வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு மருதநில மக்கள் ஆற்றங்கரை நாகரிகத்தை தோற்றுவித்த நாகரிகத்தின் வளர்ச்சியே ஊர், மூதூர், பேரூர், சேரி, நகரம், நாடு, ஞாலம், மாஞாலம் எனப் பரந்துபட்டு ‘ஒரு குடையின் கீழ் மல்லன் மா ஞாலாமாக’ பன்னெடுங்காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மையே. அந்த வகையில் வேளாண் குடிகளின் வரலாற்றையும் அடையாளத்தையும் இன்றைய உலகிற்கு வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்

இயற்கையைக்குறித்தும் அதன் அங்கங்களான தாவரங்கள் விலங்குகள் நீர்நிலைகளைக் குறித்தும் எழுதப்படாத தமிழ் இலக்கியங்களே அன்றும் இன்றும் இல்லை எனலாம். இந்த நவீன மகாபாரத நாவலும் இவ்வாறே பல்வேறுபட்ட தாவரங்களை சரியான அறிவியல் அடிப்படையில் தெரிவிக்கிறது.. பலநூறு தகவல்கள் தாவரவியல் அடிப்படையில் வெண்முரசில் சொல்லபப்ட்டிருப்பினும் இக்கட்டுரையில் மிகசிறந்த சில உதாரணங்களே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மாமலர் எனும் பதிமூன்றாவது நாவல் வரிசையும் ஆயிரம் இதழ் கொண்ட சொளகந்திக மலரினை பீமன் தேடிக்கண்டடைவதை குறித்தே பேசுவது வெண்முரசின் இன்னொரு சிறப்பு.

வாணிதாசனின் குழந்தை இலக்கியம்

குழந்தைகளுக்குக் கற்பிக்கும் எளிய வழியே குழந்தை இலக்கியம். குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என வாய் அளவில் மட்டுமே பேசப்படுகின்றது. அதற்கான செயல் வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை கருவுற்றிருக்கும்12 வாரத்திலேயே குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என அறிவியல் தெரிவிக்கிறது. ஆக குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என்பதால் குழந்தை கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகின்றது. அதனாலேயே தாய் கருவுற்றபோது நல்ல செயல் செய்யவும், நற்சிந்தனையுடன் இருக்க வேண்டும் எனவும்;, பொறனி அதாவது பொறாமை பேசுபவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது எனவும் நாம் உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும் எனவும் சொல்வதற்கான காரணம் குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்கிறது என்பதாலே தான்.

வளையாபதி காப்பியத்தில் உளவியல்

மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மொழியாக வெளிப்படுத்துவது உளவியல். தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வாயிலாக உளவியலை பற்றி விளக்கியுள்ளார். உளவியல் (psychology) என்னும் கிரேக்க சொல் ‘ஸைக்கி’ (Psyche)என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் ‘லோகஸ்’ (Logus) என்ற அறிவியலை (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாக மூலமாக கொண்டுஉருவாக்கப்பட்ட சொல்லாகும்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியம் சமண சமயத்தைச் சேர்ந்த காப்பியமாகும்.இக்காப்பியம் சமண சமயத்தைச் சார்ந்தது.சமண சமயக் கோட்பாடுகளை விளக்கக் கூடியதாக இக்காப்பியம் திகழ்கிறது.இக்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,72 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.வளையாபதியின் காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு என அறிஞர்களின் கருத்தாகும்.வளையாபதி காப்பியத்தில் உள்ள உளவியல் சிந்தனைகளை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Scroll to Top