01

சுவடித் திரட்டும் சிலப்பதிகாரமும் பதிப்பு முறைகளில் ‘கோவலன் கதைகள்’

ஆய்வுச் சுருக்கம்

மானுடச் சமூகம் வாழ்வில் கருத்துரைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் கொண்டு செல்வதற்கு வாய்மொழி மரபில் செவிவழியாக வழங்கியிருக்கிறது. சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் கருத்தமைவுகள் இடப்பெயர்வு சூழலில் ஓரிடத்தில் வழங்கப்பட்டவைகள் மறைந்து இருக்கிறது. வாய்மொழி கதைகள், பாடல்கள் பதிப்பு செய்யப்படாத கி.மு காலகட்டத்தின் வரலாற்று தகவல்களாக விளங்குகின்றன. வாய்மொழி மரபில் கொண்டு வந்த தகவல்கள் வரிவடிவ அமைப்பில் தொடக்கக் காலத்தில் மண், ஓலை, கல், துணி, தோல் என பயன்படு பொருள்களில் எழுத்து வடிவ அமைப்பில் செய்திகள் பதிவாக்கம் ஆனது.

மானிட வாழ்க்கையில் மக்கள் காலத்திற்கு ஏற்றாற்போல பொருள் பயன்பாட்டையும் குறிப்பிடுகின்றனர்.   எழுத்தறிவு பெறாத பாமரர்கள் மனவறிவை பெற்று கதைகளும் கணக்கியலும் தன் சூழலியல் முறைகளையும் மனக்குவியல்களில் தேர்ந்தவராக வாழ்ந்துள்ளனர். ஒருவர் பகிர்ந்த கருத்துகள் கதை வடிவில் வழங்கியபோது இரண்டாம், மூன்றாம் மனிதர்களிடம் வந்து கதைகள்  திருத்தம் பெற்றுள்ளன என்பதை சுவடித் திரட்டும் பதிப்பு நூலும் கோவலன் கதையை விளக்குவதை பதிப்புமுறை ஆய்வாக நெறிப்படுகிறது.

ஆய்வு செல்கை

தமிழ் நில பரப்புகளான வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்னும் வரைக்குள் பூம்பட்டிணம் மற்றும்  வடமதுரை பாண்டியர்களின் ஆளுகை இடம் வகித்தது. பூம்பட்டிண வணிகர்களின் வாழ்வியலும் பாண்டிய அரசியலும் நாட்டுப்புற வாழ்வியலோடு ஒப்புமை செய்து கதைப்போக்கையும் பதிப்பு முறைகளையும் கொண்டு கோவலன், கண்ணகி பாண்டிய மன்னர்களின் பிறப்புவினை அறியும் ஆய்வின் செம்மையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

பயன்பாட்டு முறைகள்

மானுட ஆய்வில் மக்களின் வாழ்வியல் கூறுகளைக் கண்டறிந்து இனக்குறியியல், மொழி, பண்பாடு, மருத்துவம், பழக்கவழக்கம், என வாய்மொழி மரபு அமைப்புகள் கதைகள் வழி வெளிப்பட்டு வருகிறது. கதைகள்  பல்வேறு இடத்து மக்களிடம் மருங்கொலித்து வாய்மொழியாக வந்துள்ளது. அச்சு வடிவம் வந்த காலத்தில் வரிவடிவ எழுத்து முறைகள் பயன்படுத்தி வரப்படுகிறது. எழுத்து வடிவ முறைகள் நாட்டுப்புற மக்கள் மண் ஓடுகளிலும் ஓலைகளிலும் கல்களிலும் ஆடைகளிலும் பயன்படுத்தியதைக் காணலாம். அச்சு இயந்திரக் கூடங்கள் வருகையினால் மரக்கூழில் செய்யப்பட்ட காகிதங்களில் எழுத்த வடிவ முறைகள் பயன்படுத்த முயன்று வளர்ச்சிப் பெற்றுள்ளன. கதைகள் மக்களின் இடம் பெயர்வு வாழ்வியலின் வாய்மொழியாகவும் பதிப்பின் நூலாக்க வடிவிலும் விளக்கம் பெற்று வருகின்றன. 

திருக்குறளில் செருக்கு– சொற்கருத்தாய்வு

இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வழிவகுக்கின்றன.  அறிவுறுத்தல், இன்புறுத்தல், மொழித்திறன் மிகுத்தல், பண்பாட்டுக் காப்பு.  பொழுதுபோக்கு ஆகிய படைப்பு நோக்கங்களுள், தமிழ் இலக்கியங்களில் அறிவூட்டல் பண்பு மேலோங்கிக் கோலோச்சுதல் வெளிப்படை. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் சொல்லாட்சிச் செறிவும் திருக்குறளில் காணப்படுகின்றன.   அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும்  உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும்.

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.

சேனாவரையர் உரையில் பெயர்கள்

சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது.

சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்டக்கலை

நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளில் ஒன்றாக ஒயிலாட்டகலைக் குறித்தும் அக்கலை சிவகாசி வட்டாரத்தில் நலிவடைவதை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு நிகழ்த்தப்பட்டு வருவதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை நோக்கமாக அமைகிறது.

சங்கஇலக்கியத்தில் பழந்தமிழர் பண்பாடு ( உணவு , உடை ,பழக்கவழக்கங்கள்)

பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”.1 சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” 2. மக்கள் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, தொழில், தெய்வம், மொழி, அரசியலமைப்பு, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக்  கூறுகள்  அமைகின்றன. சங்கத்தமிழரின்  பண்பாட்டுக் கூறுகளுள்  சிலவற்றை மையப்படுத்தியதாக  இவ்வாய்வுரை  அமைகின்றது .

சங்க காலத்தின் எழுதிணை மரபுகள்

ஏழு வகை புறத்திணைகளை தொல்காப்பியர் கூறுகிறார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன. ஐந்திணைக்கு மலர்களின் பெயர்களைச் சூட்டியது போலவே புறத்திணை வகைக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பாடாண் திணைக்கு மட்டும் மலரின் பெயர் சூட்டப்படவில்லை. பிற்காலத்து இலக்கணங்களில் புறத்திணை பன்னிரண்டு வகையாக விரித்துக் கூறப்பட்டன.

சங்க கால உணவு முறைகள்

உயிர்வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கிய உணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுகள் தான் நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பது தான் ஆரோக்கிய உணவு என்பதாகும். அப்படிப்பட்ட உணவு வகைகளை நமது சங்க கால மக்கள் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பததைத்தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.

சங்க இலக்கியத்தில் தமிழ் எழுத்துருக்கள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் தொடர்பாடல்கள் பற்றிய செய்திகள் காலத்திற்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளது. எழுத்துருக்கள் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் விவரமாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன எனினும் அது குறிப்பிடும் மூல நூல் அகத்தியம் பற்றி நாம் அறியாததால் எழுத்துருக்களின் வளர்ச்சியின் ஆரம்பம் குறித்து நம்மால் தெளிவாக எடுத்துக்கூற இயலவில்லை. இருப்பினும் சங்க காலம் சுட்டும் எழுத்துருக்கள் பற்றிய செய்திகளை இங்கு காண்போம்.

Scroll to Top