சங்க இலக்கியத்தில் சூழலியல்

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளமைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல், படர்தல், ஆராய்தல், கருதுதல், ஆலோசித்தல் என்று ஒரு சொல் பல பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வு பிறரையும், பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது. சூழ்தல் என்பது மனிதன் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பதாகும்.
பழந்தமிழர்கள் காடுகளை அழித்து நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் சமன் நிலையை குளம் போன்று உருவாக்கி பேணிப் பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களின் அவசியத்தை,
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”
என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது.

கலித்தொகை காட்டும் வாழ்வியற் போதனைகள்

மனித நல்வாழ்வுக்கான போதனைகளை கூறுவதில் தமிழ் இலக்கியங்கள் காத்திரமான பங்கு வகிக்கின்றன. தழிழ் இலக்கியங்களுள் ஒன்றானகவும் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் கலித்தொகையில் மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்வியற் போதனைகள் பல காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியதாகும்.
சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியை வகுத்துச் செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் நாம் அறியமுடிகிறது. “கல்வி வல்லார் கண்ட கலி” (கனகசபாபதி, தை.ஆ., 1937, கலித்தொகை மூலமும் விளக்கவுரையும் – பாலைக்கலி, ப.ஒi) என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையிலும் தமிழர்களின் வாழ்வியல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. பழந்தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் பெட்டகமாகத் திகழும் இந்நூலின்கண் கூறப்படும் வாழ்வியற் போதனைகளை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.

கரூர் மாவட்ட கும்மிப் பாடல்கள்

வாழையடி வாழையாக மக்கள் வாய்மொழியாகவே போற்றிப் புகழ்ந்து வரும் எண்ணற்ற எழுதாத இலக்கியங்களாக வாழும் இலக்கியமாக திகழ்வது நாட்டுப்புறப் பாடல்கள். மக்கள் தங்களின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் (பிறப்பு முதல் இறப்பு வரை) பாடல்கள் பாடி இருந்துள்ளனர். கிராமப்புற மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை உள்ளதை உள்ளவாறு பாடுவது கிராமியப் பாடல்கள் என்று கூறலாம். அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கரூர் மாவட்ட மக்களின் கும்மிப் பாடல்கள் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எதிர்காலத் தமிழ் இலக்கியங்கள்- தமிழின் அடுத்த பொற்காலத்தின் அடித்தளம்

இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது.   தமிழ்மொழியில் இன்று பலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும் நூல்கள் பல அவர்களின் பள்ளிப்பாடமாகவோ அல்லது, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவோ மட்டுமே அமைந்து உள்ளன.  பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி  மாணவர்கள் தமிழ்மொழியை இலக்கியங்களை அணுகுகின்றனரா என்பதும் சந்தேகமே! தொலைக்காட்சி திரைப்படம் இவற்றைத்தாண்டி சமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள் ஆகியவற்றிலேயே அவர்களின் நேரம் செலவாகின்றது. கணினிச் சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம்.

உடன்போக்கிற்குப்பின் நற்றாயின் உணர்வு

தேனும் பாலும் ஊட்டி வளர்த்த மகள,; தனக்கு ஒத்த ஆண்மகனோடு களவு வாழ்வினை மேற்கொண்டு, கற்பு வாழ்வினை நிகழ்த்த தன் சுற்றம் அறியாமல் தலைவனோடு செல்லுதல் உடன்போக்கு ஆகும். சங்க கால வாழ்வில் இந்நிகழ்வு கற்பு வாழ்விற்கு அடித்தளமாக அமைகின்றது. உடன் போக்கினை மேற்கொண்ட தனது மகளை எண்ணி வருந்தும் ஒரு தாயின் உணர்வு நிலையினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி

பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வகை நூல்களைச் சுவடியிலிருந்து நூல் உருவாக்கம் செய்தார் எனினும், சங்க நூல்களுள், எட்டுத்தொகையில் ஐந்தையும், பத்துப்பாட்டு முழுவதையும் பதிப்பித்துச் சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தான் பதிப்பிக்கும் எந்த ஒரு நூலையும் வெறும் சுவடியின் படியெடுப்பாக அமைக்காமல் பதிப்பினுள் அந்நூல் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தருவது உ.வே.சா.வின் தனித்த அடையாளம். நூலாராய்ச்சி செய்து தன்னுடைய பதிப்பை ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிடும் உ.வே.சா., இந்நூலில் (அ) இவ்வுரையில் வரும் இன்ன கருத்துக்கள் தனக்குப் புலப்படவில்லை என்பதையும் சுட்டிச் செல்வார். அவ்வாறு அவர் குறிப்பிடும் பகுதியுள் ஒன்று ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’. இவ்வகராதி, அதன் பின்புலம், உ.வே.சா.விற்குப் பின்னாளில் அதில் விளங்கியவை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையில் இராவணன் ஆட்சி முறை

பண்டைய காலத்தில் முடியாட்சியே நடைமுறையில் இருந்து வந்தது. மன்னன் மட்டுமே உயர்ந்தவனாகக் கருதப்பட்டான்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு” – (குறள் என்: 385)
என்ற திருக்குறளின்படி அரசர்கள் பொருட்களை உருவாக்கி, செல்வத்தை ஈட்டி, நாட்டின் வளத்தைப் பெருக்கி, மக்களைப் பாதுகாத்தனர். மக்களின் நலனுக்காக சிறந்த நெறிமுறைகளை வகுத்துத் திறமையான ஆட்சி நடத்தினார்கள். மக்களும் மன்னர்களைத் தெய்வமாகவே எண்ணி வாழ்ந்தார்கள்.
ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” – புறம் – 187
காடு, மேடு, பள்ளம் போன்ற நிலத்தோற்றங்கள் ஒரு நாட்டில் இயல்பாகவே காணப்படுபவை. அவை, எப்படி மாறுபட்டு இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் நல்லவர்களாக இருந்கும்போது அது நல்ல நாடாகவே கருதப்படும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
அரசர்களும் அறிவு, அன்பு, ஆற்றல் உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆறிவினால் நாட்டின் காவலுக்கு உரியவற்றை ஆராய்ந்து முறை தவறாது காப்பாற்ற வேண்டும்.
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” – குறள் – 544.
குடிமக்களின் நலனை அரவணைத்து நல்லாட்சி செய்யும் தலைவனின் வழியைப் பின்பற்றியே உலக மக்கள் துணைநிற்பர் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும்.
அன்பினால் குடிமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்று வருபவர்களுக்கு ஈதலும், தன்னுடைய ஆற்றலினால் பகையரசனை வீழ்த்துவதும், போரில் வெற்றி பெறுதலும் அரசனின் கடமைகளாக இலக்கியங்கள் கூறுவதைக் காணலாம்.
அதே சமயம் சில அரசுகள் சிறப்பான ஆட்சியைத் தரமுடியாத நிலையில் இருந்திருக்கின்றன. அரசர்களின் குணநலன்களைப் பார்க்கும்போதும், அரசுகள் ஒன்றுக்கொன்;று மாறுபட்ட இருந்திருக்கின்றன. இந்த வேறுபாடுகள்தான் ஒரு அரசு நல்லரசா? வல்லரசா? என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியிருக்கின்றன.

இசக்கியம்மன் – வழிபாட்டு

இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் இதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, வழிபாடுகளையும் விழாக்களையும் தோற்றுவித்தான.; காலப்போக்கில் இயற்கைக்கு உருவம் கொடுத்து வழித் தொடங்கினான.; ஆரம்ப காலத்தில் வழிபாட்டிற்கு அடிப்படையாக மந்திரம் மட்டுமே தோன்ற, பின் வழிபாடும் சமய விழாக்களும் தோன்றின. ஒவ்வொரு பெயரையும் இறைவனுக்குச் சார்த்தி வழிபாட்டு முறைமைகளில் வேறுபாட்டை கொண்டனர். அதிலும் இசக்கியம்மன் வழிபாட்டு முறைகளைப்பற்றி இங்கு காணலாம்.

ஆசாரக்கோவை புகட்டும் வாழ்வியல் ஒழுகலாறுகள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை அறிவியல் நெறிமுறைகளை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது. அறநெறி சார்ந்த கருத்துக்களும் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் நம் அன்றாட நிகழ்வுகளில் செயல்படுத்தும் சிறுசிறு நிகழ்வுகளும் அறிவியலாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் தூய்மையும் ஒழுக்கமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளளன. ஆசாரக்கோவை புகட்டும் வாழ்வியல் ஒழுகலாறுகளைச் சுட்டுவதே இவண் நோக்கம்.

New Frontiers of Translation in 21 st Century

Translation is one of the various branches of learning and it has become an important discipline that encompasses separate body of Knowledge. Newmark considers translation as ” A craft consisting in the attempt to replace a written message or statement in one language into another language ”. The need for translation has existed since immemorial. Translating important literary works from one language into others has contributed significantly to the development of international culture. Particular social forms and cultural norms and ideas have constantly been spreading an assimilating into other cultures by the way of translation. This paper attempts to examine the status of Translation in this Century. It is also intended to help budding translators to understand the current status of the field of translation and to suggest ways and means for them to prepare themselves in advance for their professional task.
No one can down play the crucial role played by the translators in serving as a bridge between languages thereby coming to the rescue of monolingual speakers. That is why translation is viewed as a means to reinforce international and intercultural relationship.