வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்
இயற்கையைக்குறித்தும் அதன் அங்கங்களான தாவரங்கள் விலங்குகள் நீர்நிலைகளைக் குறித்தும் எழுதப்படாத தமிழ் இலக்கியங்களே அன்றும் இன்றும் இல்லை எனலாம். இந்த நவீன மகாபாரத நாவலும் இவ்வாறே பல்வேறுபட்ட தாவரங்களை சரியான அறிவியல் அடிப்படையில் தெரிவிக்கிறது.. பலநூறு தகவல்கள் தாவரவியல் அடிப்படையில் வெண்முரசில் சொல்லபப்ட்டிருப்பினும் இக்கட்டுரையில் மிகசிறந்த சில உதாரணங்களே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மாமலர் எனும் பதிமூன்றாவது நாவல் வரிசையும் ஆயிரம் இதழ் கொண்ட சொளகந்திக மலரினை பீமன் தேடிக்கண்டடைவதை குறித்தே பேசுவது வெண்முரசின் இன்னொரு சிறப்பு.