புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம்
வாழ்த்துதல் என்பது சமூகப் பண்பாட்டு உயர்வின் அடையாளமாகும். வாழ்த்தும் பண்பு தனி மனிதனைப்
பண்புடையவனாக மேம்படுத்தவல்லது.அனைத்து சமூகத்தினரிடமும் வாழ்த்து மரபுகள் ாணப்படுகின்றன. மனிதர்களிடையே ஒருவரோடு ஒருவர் பழகுவதற்குரிய முகமனாக அமைகின்றன.
ஓவ்வொரு இனத்திற்கும் அவ்வவ் இனத்திற்கே உரிய வாழ்த்து மரபுகள் நிலைத்துள்ளன. அவரவர் வாழும்
சூழல்கள்ரூபவ் சமூகம் சார்ந்த பண்பாடு ஆகியவை வாழ்த்து மரபுகளைத் தீர்மானிக்கிறது. வாழ்த்தும் பண்பானது மனிதனைப் பணிவுத்தன்மையால் மேம்படுத்துகிற பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. பிறர் நலம் நாடியுரைக்கும் சொற்கள் வாழ்த்தின்பாற்பட்டவை. இவ்வாழ்த்து ஓரினத்தின் பண்பாடுரூபவ் பழக்கவழக்கங்களை அறிவதற்கு வழிவகுக்கின்றன.
மூத்தோர் இளையோர்களுக்கு நல்ல சொற்களை ஆசியாக வழங்குதல் என்பது பண்பாகும். இயற்கையோடு
இணைந்து வாழ்ந்த மனிதன் காலம் கடந்தும் வாழக்கூடிய நிலம்ரூபவ் நீர்ரூபவ் தீரூபவ் வளிரூபவ் வெளி எனும் ஐம்பெரும் பொறிகளின் ஆற்றலை உணர்ந்தவன். பண்டைய கால வாழ்த்து முறையும் மானுட குலத்தைக் காக்கும் ஐம்பொறிகளைப் போல நிலைபெற்று வாழும் தன்மை கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தை நிரம்பியிருந்ததனை புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் வாயிலாக அறிய முடிகின்றது.