காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை

பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்

மனிதர் தம் வாழ்நாளில் சகமனிதர்களையும் தம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் நேசிக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வலியுறுத்துகிறார். குழந்தையின் ஞான நிலையை வளர்ந்தவர்கள் பெறவேண்டும் என்றும், ஜீவ ஆதாரமாகவும் அளப்பரிய ஆற்றல் மிக்கதாகவும் உள்ள இயற்கையை நேசிக்கும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சகஉயிர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உரைக்கிறார். இவ்வாறு இயந்திரங்களைப்போல் இல்லாது தருமசிந்தனை மிக்கதாக மனித இனம் விளங்குவதற்குரிய வழிமுறைகளை மனிதம் என்ற கவிதையின்…

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.

சேனாவரையர் உரையில் பெயர்கள்

சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது.

ChatGPT and Education : Implications for academic libraries

This article discusses ChatGPT, an artificial intelligence language model that can generate human-like text based on a given prompt. The article discusses how some educators are concerned about the implications of ChatGPT, a tool that has the ability to generate essays, book summaries, and other content. There is discussion of how ChatGPT is not reliable…