அற இலக்கியங்கள் காட்டும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகள்: நான்மணிக்கடிகையை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, மானிடவியல் ஆய்வு.

அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி நூல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி Áல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.

பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு

                           பாடல்களுக்கு அழகு சேர்ப்பவை நயங்களே. மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக  இருக்கும் பொருட்டும் கவிக்கு அழகு சேர்க்கும் பொருட்டும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் பாக்களில் நயங்கள் பயன்படுத்தப்பட்டன.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் பாநயங்கள் அமைந்து பாக்களை அழகுப்படுத்துகின்றன. நான்மணிக்கடிகையில் உவப்பு, நன்று, அதிர்வு என்னும் உரிச்சொற்கள் சொற்பொருள்பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்து சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஒரு சேர வழங்குகிறது. உரிச்சொற்கள் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான்மணிக்கடிகை வழி ஆராய முடிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை

பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்

மனிதர் தம் வாழ்நாளில் சகமனிதர்களையும் தம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் நேசிக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வலியுறுத்துகிறார். குழந்தையின் ஞான நிலையை வளர்ந்தவர்கள் பெறவேண்டும் என்றும், ஜீவ ஆதாரமாகவும் அளப்பரிய ஆற்றல் மிக்கதாகவும் உள்ள இயற்கையை நேசிக்கும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சகஉயிர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உரைக்கிறார். இவ்வாறு இயந்திரங்களைப்போல் இல்லாது தருமசிந்தனை மிக்கதாக மனித இனம் விளங்குவதற்குரிய வழிமுறைகளை மனிதம் என்ற கவிதையின்…

பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு

பாடல்களுக்கு அழகு சேர்ப்பவை நயங்களே. மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டும் கவிக்கு அழகு சேர்க்கும் பொருட்டும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் பாக்களில் நயங்கள் பயன்படுத்தப்பட்டன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் பாநயங்கள் அமைந்து பாக்களை அழகுப்படுத்துகின்றன. நான்மணிக்கடிகையில் உவப்பு, நன்று, அதிர்வு என்னும் உரிச்சொற்கள் சொற்பொருள்பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்து சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஒரு சேர வழங்குகிறது. உரிச்சொற்கள் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான்மணிக்கடிகை வழி ஆராய முடிகிறது.

அகத்தி இலைகள் : 5 இந்த ஊட்டச்சத்து அடர்த்தியான பச்சை காய்கறியின் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்

செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா, அகத்தி கீரை அல்லது வெஜிடபிள் ஹம்மிங்பேர்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஃபேபேசி குடும்பம் மற்றும் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தளர்வான கிளை மரமாகும். அகத்தி கீரை என்பது பொதுவாக தாவரத்தின் பச்சை இலைகளைக் குறிக்கிறது, இது வெப்பமான ஈரப்பதமான காலநிலையில் வளரும் ஒரு வேகமாக வளரும் மரம் மற்றும் மரம் இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா மற்றும் மெக்ஸிகோ, தென்மேற்கு அமெரிக்காவில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

Unleashing the Power Within: Yoga and Meditation for School Students to Supercharge Memory Skills

In today’s fast-paced world, school students often face the daunting challenge of keeping up with the demands of their education. Stress, distractions, and an overload of information can often hinder their ability to retain and recall vital information. This is where yoga and meditation come to the rescue. Discover how incorporating these ancient practices into…

தமிழ் செவ்விலக்கியப் பதிவுகளில் உயர்கல்வி புலங்கள்

This study aims to explore the Tamil legacy from the educational research perspective by mapping the existence of the multiple disciplines in higher education enjoyed by ancient Tamil ethnic groups. The primary goal of the study is to demonstrate the status of the learned, the value of education, the multidisciplinary academics, and the advancements that…