அறப்பளீசுவரர் சதகத்தில் பிறருணர்வுச் சிந்தனைகள்
Keywords:
அறப்பளீசுவரர் சதகம், அம்பலவாணக் கவிராயர், பிறருணர்வு, தமிழ் அற இலக்கியம், சதக இலக்கிய மரபுAbstract
மனித மதிப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதில் தமிழ் அற இலக்கியம் முக்கிய பங்காற்றுகிறது. சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான சதக இலக்கியம் அற, ஒழுக்க மற்றும் மனிதநேயக் கருத்துகளை எளிய செய்யுள் வடிவில் எடுத்துரைக்கிறது. அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுவரர் சதகம் பிறருணர்வு, கருணை, ஈகை, நன்றி, மன்னிப்பு மற்றும் சமூக ஒற்றுமை போன்ற உயரிய மனிதப் பண்புகளை வலியுறுத்தும் அற நூலாக விளங்குகிறது.
இவ்வாய்வுக் கட்டுரை, அறப்பளீசுவரர் சதகத்தில் பிரதிபலிக்கும் பிறருணர்வுச் சிந்தனைகளை ஆய்வு செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் வழியாக, பிறரின் துன்பத்தை உணர்தல், தன்னலமற்ற சேவை, தீங்கு விளைவிக்காத மனப்பான்மை, மன்னிப்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவை மனித வாழ்வின் அடிப்படை நெறிகளாகக் கவிஞர் வலியுறுத்துவதை இக்கட்டுரை விளக்குகிறது. இக்கருத்துகள் இன்றைய சமூகச் சூழலிலும் பொருத்தமுடையவையாக இருப்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
Downloads
References
அம்பலவாணக் கவிராயர், அறப்பளீசுவரர் சதகம், பாடல் எண் 26.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 செல்வி க. தமிழ்நிலா, முனைவர் இரா. தீபா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.