வள்ளுவமும் பொருளாதாரமும்
Keywords:
திருவள்ளுவர், பொருளாதாரம்Abstract
தமிழ் மரபு வாழ்க்கையை மூன்று கூறுகளாக பிரிக்கிறது. அவை அறம், பொருள், இன்பம் என்பவை. இவையே மக்களுக்கு உறுதிப்பொருள்கள் எனவும், அடைய வேண்டியவை எனவும் நூல்கள் வலியுறுத்துகின்றன. வள்ளுவர் இவற்றையே முப்பால் என வகுத்தார். அறத்துப்பால் மக்களின் அகவாழ்வின் ஒழுகலாறுகளையும் தனிமனிதர் என்ற முறையில் வேண்டிய ஒழுகலாறுகளையும் அறம் என வகுத்து வழங்குகிறது. பொருட்பால் மக்களின் அரசியல் மற்றும் சமூக வாழ்வினை விளக்குகிறது. இன்பத்துப்பால் மக்களின் காதலின்பத்தை இலக்கியமாகத் தருகிறது. மனித வாழ்வோட்டத்தில் ‘பொருள்’ இன்றிமையாததாகும். தவிர்க்கமுடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவதும் நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும். திருக்குறள் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறிகளை வகுத்துரைத்துள்ளது. குறிப்பாக, மனிதன் பொருளீட்டி எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் பொருளியல் குறித்தான கருத்துக்களை பொருட்பாலின் வழி இக்கட்டுரை ஆராய்கின்றது.
Downloads
References
பூபாலப் பிள்ளை, தமிழ் வரலாறு, ப.34
திருவள்ளுவர், குறள்.50
சண்முகம், வள்ளுவம் கூறும் பொருளியல், ப.142
சிலம்பு, கொலைக்களக்காதை, பா.வரி.71-73
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 செ.சுகக்குமார், முனைவர் சி.சுப்ரமணியன் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.