தேனி மாவட்டம் அழகாபுரி பெத்தக்கம்மாள் கோவில் வழிபாடும் நம்பிக்கைகளும்
Keywords:
தேனி மாவட்டம், அழகாபுரி, பெத்தக்கம்மாள் கோவில்Abstract
தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை அருகில் உள்ள அழகாபுரி கிராமத்தில் தெலுங்கு மொழி பேசும் நாயுடு சமூகத்தவரால் வணங்கப்படும் குலதெய்வம் பெத்தக்கம்மாள். தொல்லியல் ஆய்வுகள், சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் நடுகல் வழிபாடு பின்னாளில் குலதெய்வ வழிபாடாக மாறியது என்பது சான்றோர் பலரது கூற்றாகும்.
"ஒளிறு ஏந்து மறுப்பின் களிறு எரிந்து வீழ்ந்தனெக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை" ( புறம். 335 ) என்கிறார் மாங்குடி கிழார் . சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் நடுகல் வழிபாடானது போரில் இறந்த வீரர்களை வணங்குவதாக அமைந்துள்ளது. செங்குட்டுவனால் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட நடுகல் வழிபாடு மட்டுமே பெண்களுக்கான நடுகல் வழிபாடாகக் கிடைக்கின்றது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது பெண் தெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது . பாண்டி, கருப்பு, முனீஸ்வரர் போன்ற தெய்வங்கள் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். அவ்வகையில் தேனி மாவட்டம் அழகாபுரி பெத்தக்கமாள் கோயில் வரலாறும் நம்பிக்கைகளும் நம்பிக்கைகளோடு தொடர்புடைய சான்றுகளும் இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்படுகின்றன.
Downloads
References
[1]. முனைவர் ச முருகானந்தம், மக்கள் வழக்காற்றியல், சித்திரா நிலையம், 7/40 கிழக்கு செட்டித் தெரு, பரங்கிமலை ,சென்னை 16.
[2]. பேராசிரியர் அ .ராஜேந்திரன், நாட்டுப்புற பண்பாட்டு பழக்கவழக்கங்கள், திருமலா பப்ளிகேஷன்ஸ், நெ. 17 , 19 வது தெரு, நேரு காலனி , பழவந்தாங்கல் சென்னை 114
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் இரா.கலைவாணி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.