பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளில் கண்ணிமை துடித்தல் (சங்க பாடல் முதல் திரைப்பாடல் வரை)
Keywords:
தொல்காப்பியம், சங்க இலக்கியம், சகுனம், நிமித்தம்Abstract
சங்க காலத்தில், இயற்கையில் நிகழும் மாற்றங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்பாடுகளை எதிர்கால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி அறியும் வழக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. நன்மை அல்லது தீமை விளங்குவதை உணர்த்தும் இத்தகைய அறிகுறிகள் 'நிமித்தம்' (சகுனம்) என்று அழைக்கப்பட்டன. தமிழர் நம்பிக்கைகளில் ஒன்று கண்ணிமை துடித்தல். பெண்களின் இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும் என்றும் வலது கண் துடித்தால் தீமை ஏற்படும் என்றும் நம்பினர். தமிழில் கண்ணிமை துடித்தல் (சகுனம்/நிமித்தம்) சார்ந்த தகவல்கள் சங்க இலக்கியம், காப்பியங்கள், மற்றும் திரையிசைப் பாடல்களில் பரவலாகப் பேசப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் நிமித்தம் என்ற சொல்லாடலைக் காணமுடிகிறது. கலித்தொகை மற்றும் ஐங்குறுநூற்றில் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையும் கம்பராமாயணத்தில் இராமனைப் பிரிந்த சீதையின் நிலையும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி மற்றும் மாதவியின் நிலையும் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள கண்ணிமை துடித்தல் சார்ந்த பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
Downloads
References
[1.] தொல்காப்பியம் சொல்லதிகாரம், பொருளதிகார மூலம், இளம்பூரணர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
[2.] துரைசாமி பிள்ளை, ஒளவை, சு. (உரை), ஐங்குறுநூறு மற்றும் புறநானுறு, அண்ணாமலை நகர், இரண்டாம் பதிப்பு, 1978.
[3.] காந்தி, கா, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
[4.] தாட்சிணாமூர்த்தி, அ, டாக்டர், தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை – 40.
[5.] யுகபாரதி, கவிஞர், இலக்கியமும் இசையும் (இணையம்)
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் சு. சரஸ்வதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.