பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபு
Keywords:
வழிபாடு, சமய நம்பிக்கை, புறநானூறுAbstract
மனித சமுதாயத்தின் தோற்றத்தோடு வழிபாட்டு மரபுகளும் தோன்றின. இயற்கையின் பேராற்றலைக் கண்டு வியந்த பண்டை மனிதன், தன்னைவிட உயர்ந்த சக்தி ஒன்று உலகை இயக்குகிறது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக வழிபாடு உருவானது. பண்டைத் தமிழர்களின் வாழ்வியலிலும் வழிபாடு முக்கிய இடம் பெற்றிருந்தது. அவர்களின் சமயம், பண்பாடு, அரசியல், சமூக அமைப்பு ஆகிய அனைத்திலும் வழிபாட்டின் தாக்கம் காணப்படுகிறது. சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழரின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வரலாற்றுப் பெட்டகங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு, புறவாழ்க்கைக் கூறுகளை விரிவாக எடுத்துரைக்கும் சிறப்புடையது. அரசியல், போர், கொடை, வீரம், சமூக அமைப்பு ஆகியவற்றுடன் சங்ககாலத் தமிழர்களின் சமய நம்பிக்கைகளையும் வழிபாட்டு மரபுகளையும் வெளிப்படுத்தும் அரிய சான்றுகளை புறநானூறு வழங்குகிறது. புறநானூற்றில் இடம்பெறும் வழிபாட்டு முறைகள், அக்கால மக்களின் பக்திச் சிந்தனையையும் சமூகப் பண்பாட்டையும் அறிய உதவுகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் வகையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் எனும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
Downloads
References
[1.] ச.வே சுப்பிரமணியன், புறநானூறு மூலமும் உரையும்
[2.] மு. வரதராசனார், சங்க இலக்கிய ஆய்வு
[3.] கா. சுப்பிரமணியன், சங்ககாலத் தமிழர் வாழ்வியல்
[4.] தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் க. சாமுவேல் பாபு (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.