ஆசாரக்கோவை காட்டும் வாழ்வியல் அகநெறிகள்
Keywords:
துயில் எழுதல், உறங்கச் செல்லும் நேரம், எழும் நேரம், உணவு உண்ணும்முறைAbstract
அறத்தின் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் அறநூல்கள். அவற்றில் ஒன்று ‘ஆசாரக்கோவை’ ஆகும். தமிழர்தம் பழக்கவழக்கங்கள் பலவற்றை இந்நூல்வழி அறியலாம். அதாவது, உறங்கச் செல்லும் நேரமும் உறக்கம் முடித்து படக்கையினை விட்டு எழும் நேரமும் கூறப்பட்டுள்ளது. மேலும் எழும்போது அன்றைய நாட்கள் செய்ய வேண்டிய செயல்களை வரிசையாக மனதில் எண்ணி, தந்தையும் தாயையும் வணங்கிடல் வேண்டும் என்கிறது. உணவு உண்ணும்முறை பற்றி, உண்ணும்பொழுது கிழக்குத் திசைநோக்கி அமர்ந்து, தூங்காமல், அசைந்தாடாமல் வேறொன்றையும் பார்க்காமல் பேசாமல், கையாலெடுத்து சிந்தாமல் உண்ணுதல் வேண்டும் என்கிறது. பெரியோர்களுக்கு முன்பாக, அங்காய்ந்து நகைத்தலும் கொட்டாவி விடுதலும் காறித் துப்புதலும் தும்முதலும் நாகரீகமானவர் செயலாகாது என அறிவுறத்தப்படுகிறது. சங்க இலக்கியங்களில் கூறப்படாத இப்பழக்க வழக்கங்கள் இன்றைய காலத்தில் பின்பற்றப்பட்டாலும் அவை பண்டைய தமிழரின்வழி வந்தவையல்ல. கி.பி. 250 - இக்குப் பின் அயலவர்களான களப்பிரர், பல்லவ மன்னர்கள் ஆட்சி மாற்றங்கள், நீதி இலக்கியங்களின் தோற்றங்கள் ஆகியவற்றின் வாயிலாக இவை உட்புகுந்திருக்கலாம் என்று கருதமுடிகிறது.
Downloads
References
[1.] இராசமாணிக்கம்பிள்ளை ம., (உ.ஆ.), பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் ஆசாரக்கோவை, கழகவெளியீடு, சென்னை – 18.
[2.] பாலசுப்பிரமணியம் கு.வெ. (உ.ஆ.), சங்க இலக்கியம் புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை - 600 098.
[3.] மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, 1999.
[4.] www.urakkam. com
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் மு.கருப்புசாமி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.