தமிழிலக்கியங்களில் உணவுப் பொருட்கள்
Keywords:
உணவுப் பொருட்கள், தொல்காப்பியம்Abstract
மனிதனின் இன்றியமையாத தேவை உணவு ஆகும். எனவே அனைத்து உயிரினங்களும் உணவு தேடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பசி, நோய், பகை இல்லாத நாடே நல்ல நாடு என்பார் வள்ளுவர். உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தருவது உணவு ஆகும். ஒருவர் நல்ல உடல் நலத்துடன் வாழ்வதற்கு சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும் . சத்து நிறைந்த உணவு வகைகளுள் தானியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனை,
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையிற் கொள்ளும் பண்பும்
அள்ள லோங்களத் தமுதின் பண்டியும்
தள்ளும் நீர்மையிற் றலை மயங்குமே ( கம்ப. பால. 86)
என்ற கம்பரின் பாடல் வரிகளால் அறியலாம்
தொல்காப்பியம் காட்டும் உணவு
தமிழர்கள் உணவு என்பதை உணா, உணவு, உண்டி, வல்சி, ஓதனம், ஊட்டம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான (தொல்.பொருள் – 634)
என்னும் நூற்பா எண்வகை உணவு பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
தொல்காப்பிய அகத்திணையியலில் ஐவகை நிலங்களுக்குரிய கருப்பொருள் பற்றிக் கூறும்போது உணவு என்று பொருள் தரும் வகையில் உணா என்ற சொல் அமைந்துள்ளது. மேலும் பிண்டம், பெருஞ்சோற்றுநிலை போன்ற உணவுத் தொடர்பான சில சொற்களே தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் க .மகேஸ்வரி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.