பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற வேளாண்மைக் கூறுகள்

Authors

  • முனைவர் ரா.செண்பகவள்ளி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. Author

Keywords:

வேளாண்மை, பழந்தமிழ், மலை, காடு, கழனி

Abstract

வேளாண்மை என்பது நிலத்தோடு தொடர்புடைய தொழிலும் வாழ்வும் ஆகும். நிலமே மனிதனின் இருப்பிற்கும் வாழ்விற்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் அதுவே மனிதனுக்குத் தேவையான அனைத்து கனிம வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நிலமில்லையேல் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவது அரிதாகும். எனவே நிலத்தைப் பேணுவதும் பாதுகாப்பதும் நிலத்தோடு தொடர்புடைய இயற்கையைப் போற்றுவதும் மக்களின் வாழ்வில் மிக முக்கியச் செயல்பாடாக அமைந்துள்ளது. வேட்டை சமூகத்திலிருந்து மேய்ச்சல் சமூகமாக பயணித்த மனித இனம் நிலத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து வாழத் தலைபட்டபோதே வேளாண்மை  தொடங்கிவிட்டது. வேளாண்மைச் செயல்பாட்டில் முதன்முதலாக அமைவது நிலம்சார் வாழ்வியல் ஆகும். நிலம்சார் வாழ்வியல் என்பது பரந்து விரிந்த உலகில் நிலத்தின் தன்மைக்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. அந்தவகையில் பழந்தமிழர் மலை, காடு , கழனி, கடல் என தன் நிலப்பரப்புக்களை அறிந்து, அதன் தட்பவெப்ப நிலைக்கேற்ப வாழத் தலைபட்டனர். நாடோடி வாழ்க்கையிலிருந்து  முற்றிலும் மாறி ஓரிடத்தில் சமூகமாகக் கூடி வாழ நிலமே காரணமானது. ஓரிடத்தில் தங்கி தனக்கென இருப்பிடத்தையும் வாழ்வியலையும் அமைத்துக்கொண்டனர். அதற்கு வேளாண்மை அவர்களுக்குக் கைகொடுத்தது. நிலத்தை ஆள்வது வேளாண்மை எனச் சொல்லப்பட்டாலும் நிலப்பயன்களை உருவாக்குவதும் அதனோடு தொடர்புடைய அனைத்துச் செயல்பாடுகளும் வேளாண்மையோடு தொடர்புடையது ஆகும். பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் மனிதனது வேளாண்மைச் செயல்பாடுகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் நிலம் சார் வாழ்வியலில் மனிதனின் உழைப்பும் தொழிலும் பற்றிய செயல்பாடுகள் மரபுகளாகப் போற்றப் பெறும் தன்மையை ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ரா.செண்பகவள்ளி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

    முனைவர் ரா.செண்பகவள்ளிதமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

    senbatamilsfrc@gmail.com.

Downloads

Published

17-06-2026

How to Cite

ரா செண்பகவள்ளி. (2026). பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற வேளாண்மைக் கூறுகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 436-439. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/456

Similar Articles

151-160 of 312

You may also start an advanced similarity search for this article.