சங்க இலக்கிய கபிலர் பாடல்களில் ஆசிரியப்பா பயிலும் முறை

Authors

  • முனைவர். ரா சத்யா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வீராச்சிபாளையம்,  சங்ககிரி. Author

Keywords:

தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, யாப்பருங்கலக்காரிகை

Abstract

யாப்பு பாடல்களை படைக்க உதவும் கருவி மட்டுமன்று ஏற்கனவே படைக்கப்பட்ட இலக்கியங்களை பாதுகாக்கும் கருவியும் கூட மேலும் பாட வேறுபாடுபகளையும் பதிப்புச் சிக்கல்களையும் எதிர்கொள்ள யாப்பு பயன்பாடு பெரிதும் நம்பகமான மூலவடிவத்தைப் பெற உறுதுணையாக உள்ள யாப்பின் பயன் மிகப்பெரியது என்கிறார் அறிஞர்  எல்லீசு . சங்க இலக்கிய கபிலரின் பாடல்களில் கலித்தொகையில் மட்டும் கலிப்பா பயின்று வந்துள்ளது. மற்ற அனைத்து பாடல்களும் ஆசிரியர்பாவாளான பாடல்களாகவே  அமைந்துள்ளது.

             பா வகைகளுல் ஆசிரியர்பாவையே முதலில் வைத்துக் கூறுகிறது தொல்காப்பியம் ஆசிரியம் என்பது பூர்வீகப் பாடல்களில் வளர்ச்சியாய் தமிழ் பாக்களில் மூலப்பாவாக விளங்குகிறது . ஆசிரியப்பாவுக்கு அடிப்பெருமை ஆயிரமாக  தொல்காப்பியம் கூறுகிறது. யாப்புநூல் அருட்பா அகவல் ஆயிரத்து எண்ணுற்று எச்சம் அடி நிலைமண்டிலமாய் வருதலின் இரண்டாயிரம் பாடல் பேரெல்லையாயிற்று.

      யாப்பிலக்கண உறுப்புகளான எழுத்து ஆசை சீர் தளை அடி தொடை பா பாவினங்களோடு யாப்பிலக்கணம் பற்றிக்கூறும் நூல்களான தொல்காப்பியம் யாப்பருங்கலம் காரிகை தொன்னூல் விளக்கம் வீரசோழியம் யாப்பதிகாரம் யாப்பொளி போன்ற நூல்களின் வாயிலாக யாப்பிலக்கணக் கூறுகளில் தற்போது ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களையும் சங்கக் கபிலர் பாடல்களில் ஆசிரியர்பா பயின்று வரும் தன்மையினையும் தொகுத்து இவ்வாய்வில் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்தை  அடிப்படையாக கொண்டு பிறப்பது இலக்கணம் என்பது முன்னோர் வகுத்த நெறி இதனை அடிப்படையாக கொண்டு யாப்பருங்கலம் கூறும் யாப்பு உறுப்புகளோடு சங்க இலக்கிய கபிலர் பாடல்கள் எந்த அளவிற்கு பொருந்தி வந்துள்ளது என்பதை புலப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர். ரா சத்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வீராச்சிபாளையம்,  சங்ககிரி.

    முனைவர். ரா சத்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வீராச்சிபாளையம்,  சங்ககிரி.

References

[1]. கேசிகன், புலியூர்க். தொல்காப்பியம். பாரி நிலையம், 2007.

[2]. மாணிக்கம், வ.சுப. யாப்பருங்கலக்காரிகை. அண்ணாமலை பல்கலைக்கழகம், 2003.

[3]. பிச்சை, அ. சங்க இலக்கிய யாப்பில். நியு செஞ்சுரி புக்கவுஸ், 2010.

[4]. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பதிற்றுப்பத்து. கழக வெளியீடு

[5]. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். புறநானூறு. கழக வெளியீடு,

[6]. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அகநானூறு. கழக வெளியீடு

[7]. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். குறுந்தொகை. கழக வெளியீடு,

[8]. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஐங்குறுநூறு. கழக வெளியீடு,

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர். ரா சத்யா. (2026). சங்க இலக்கிய கபிலர் பாடல்களில் ஆசிரியப்பா பயிலும் முறை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 516-524. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/475

Similar Articles

21-30 of 315

You may also start an advanced similarity search for this article.