தமிழரின் வாழ்வியலில் பெருஞ்சோற்றுநிலை
Keywords:
பெருஞ்சோற்றுநிலை, புறத்துறை, புறநானூறு, வாழ்வியல்Abstract
அகம் மற்றும் புறம் எனும் இரு பெரும் வாழ்வியல் நெறிகளைக் கொண்டிருந்த சங்க காலத் தமிழர்கள் இவ்விரு நிலைகளிலும் அறத்தை நிலையான சமூக மதிப்பாகவும் வாழ்வியல் நெறியாகவும் கொண்டிருந்தனர். வாளும் வேலும் ஓங்கும் போர் முழங்கும் களத்திலும் நெறிதவறா மாண்பை மறவர்கள் வெளிப்படுத்த முனைந்துள்ளனர். அதனை இலக்கியங்களும் இலக்கணங்களும் புறத்துறைகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. அத்தகு புறத்துறைகளுள் ஒன்றாக பெருஞ்சோற்றுநிலை அமைகின்றது. பெருஞ்சோற்றுநிலை என்பது சங்ககாலத் தமிழர்களின் உயர்ந்த வாழ்க்கை நெறியையும் வீரத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் சமூகச் சடங்காகும். விருந்தோம்பலின் மாற்று வடிவமாக அமையும் பெருங்சோற்றுநிலை, மறவர்களின் மற மாண்பிற்கு அரசு அளிக்கும் மதிப்பாக அமைகின்றது. போர்க்களத்திலும் விருந்தோம்பும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிக்குச் சான்றாக அமையும் பெருஞ்சோற்று நிலையின் பரிமாணங்களை சங்க இலக்கியமான புறநானூற்றை எல்லையாகக் கொண்டு தொகுத்தளிக்குமாறு தமிழரின் வாழ்வியலில் பெருஞ்சோற்று நிலை எனும் இவ்வாய்வு அமைகின்றது.
Downloads
References
[1]. தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு
[2]. ச. வே. சுப்பிரமணியன், சங்க இலக்கியம் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம்
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ஆ. உமாராணி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.